Monday, July 25, 2011

காதல் ஒன்றும் பயிரல்ல

தனக்கான ஓர் இதயம் துடிக்காதோ
என்றெண்ணி திசை தேடித்திரியும்
குயிலெனவே ஆலைந்திருந்தேன்
"எனதான என் இதயம் உனதாக்கிகொள்வாயோ?"- என்று
எனை நீயும் வினவும் கனம்
சுகந்தமென ஓர் அனுவும்
மயில் இறகாய் சுரத்தினையே வருடியதே-மறுநொடியே
வருடிய இதயந்தனை வால்கொண்டு வீசிவிட்டாய்
"வினவிய வினாதனை வினையாக கொள்ளாதே
விளையாட்டாய் வினவி விட்டேன்
வினாவினையே மறந்த்துவிடு"
விதைத்து வைத்து காத்திருக்க
காதல் ஒன்றும் பயிரல்ல பேரழகே
ஒரு நொடியை சதக்கூரிட்டு
ஒரு பகுதி போதுமடி எனக்குள் நீ இறங்க.

No comments:

Post a Comment